பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 19.06.2016 அன்று மழையின் மத்தியில் இடம்பெற்றது. நேற்றைய தேர் திருவிழாவிற்கு வல்வெட்டித்துறை உட்பட்ட அயல் பிரதேசங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வீதியுலாவின் பின்னர் கந்தவனக் கடவையில் தெற்குப் நோக்கி வீற்றிருக்கும் ஆறுமுக சாமி தேரில் ஏறி வீதி உலா வந்த பின் பச்சை பட்டு சாத்தி தேரில் இருந்து இறங்கி மீண்டும் இருப்பிடத்தில் வந்து அமர்ந்தார்.
கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தேவஸ்தானம் மூர்த்தி, தலம், தீர்த்தம் விருட்சம் என எல்லாம் ஒருங்கே கொண்டுள்ள மிகவும் பழமையனதும் அநாதியுமான ஆலயம் ஆகும். (மூர்த்தி சண்முகப்பொருமான், தலம் கந்தவனம், தீர்த்தம் நறுதீர் கேணி).
பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து கிழக்கு திசையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.