புதிய ஆயிரம் ரூபா தாளில் பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோயில்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2018 (வெள்ளிக்கிழமை)
இலங்கையில் புதிதாக சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா நாணயத் தாளில் நான்கு மதங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நான்கு வழிப்பாட்டுத்தலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்த சமய கோவிலாக பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு கோயில் (Point Pedro Vallipuram Alvar Vishnu kovil) இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெலும் குணசேகர (Artist Kelum Gunasekera) என்னும் கலைஞர் வடிவமைத்து இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய நாணயத் தாளில் தம்புள்ள விகாரை (Sulugal Dambulu Purana Rajamaha Vihara), மடு தேவாலயம் (Madu Church), கல்முனை மசூதி (Kalmunai Sainthamaruthu Jummah) ஆகிய வழிபாட்டுத்தலங்களும் இடம்பெற்றுள்ளது.
பிரசித்திபெற்ற புராதன வல்லிபுர ஆழ்வார் கோயில் யாழ் தீபகற்பத்தில் பருத்தித்துறைக்கு தென் கிழக்காக சுமார் 5 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
sriskandavel (srilanka)
Posted Date: March 06, 2018 at 11:12
First step of Government equal status to all religion ln the currency note.Hope this equal status will continue in all activities of the Government.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.