வடமராட்சி பகுதியில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச்சனை குழு மோதலாக மாறியதில் மோதலுக்கு தயாராக வந்த 42 பேரை தாம் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று இடம்பெற்று வருகிறது. இப் போட்டி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இப் போட்டியில் பலாலி விண்மீன், குறிஞ்சிக் குமரன் ஆகிய அணிகள் மோதின. இப் போட்டியின் போது ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று சக்கோட்டைப் பகுதியில் உள்ளவர்களை தாக்குவதற்காக கொட்டன்களுடன் வந்த 42 பேரை கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கண்டவாறு தினக்குரல் பத்த்ரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.