பருத்தித்துறை பிரதேச செயலக உதைபந்து - இறுதிக்கு வல்வை தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2022 (புதன்கிழமை)
பருத்தித்துறை பிரதேச செயலகங்களிற்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான உதைபந்தாட்ட போட்டியானது இன்றைய தினம் (13/04/2022) வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
வல்வை அணியானது தனது முதலாவது போட்டியில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினை எதிர்கொண்டது..பரபரப்பாக,இடம்பெற்ற போட்டியானது 1:1 என்ற கோல்கணக்கில் சமனிலையில் முடிவடைய வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 5:4 என்ற கோல்கணக்கில் வல்வை அணியானது வெற்றி பெற்றது..வல்வை அணி சார்பாக பெறப்பட்ட ஒரு கோலினையும் கபில்ராஜ் அதிரடியாக பெற்றுக்கொடுத்தார்.
அதனை தொடர்ந்து இடம்பெற இருந்த காலிலிறுதியாட்டத்தில் பருத்தித்துறை செந்தோமஸ் அணியானது வருகை தராத காரணத்தினால் வல்வை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
வல்வை அணியானது தனது அரையிறுதியாட்டத்தில் பொலிகை பாரதி அணியினை எதிர்கொண்டது..பரபரப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில போட்டியின் கடைசி சில நிமிடங்களில் தர்ஷனின் பந்து பரிமாற்றத்தின் உதவியுடன் நந்தகுமார் ( ரவி) அதிரடியாக கோலினை பெற்றுக்கொடுக்க மேலதிகமாக எவ்வித கோல்களுமின்றி ஆட்டம் நிறைவுக்கு வர 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு வல்வை அணி தகுதிபெற்றுள்ளது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.