பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து அரசின் ஆயிரத்து 180 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் ஆதிதீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது. இதற்கான புதிய கட்டடத்துக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று அடிக்கல் நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோன்று இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இதே கோரிக்கையை விடுத்திருந்தார். இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க்பட்டிருக்கின்றது என்றார்.
மேலும் வைத்தியசாலைக்கு குழந்தை மருத்துவ நிபுணர் இல்லை என்று பொறுப்பு வாய்ந்த அதிகாரி தெரிவித்திருக்கின்ற நிலையில் ஒரு மாதத்தில் இங்கு குழந்தை பெறுபேறு மருத்துவ நிபுணரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.