வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் ஒரு சில மணி நேரம் சிறு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தோண்டப்பட்ட குழியானது, தோண்டப்பட்ட ஓரிரு மணித்தியாலங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பெண்மணி ஒருவருக்கு அம்மன் அருள் வந்ததாகவும் இதனால் குறித்த பெண்மணி தெரிவித்த கூற்றுக்கு அமைய, வல்வை அம்மன் கோவிலடி பகுதியில் சுமார் 8 அடி ஆழமான குழி ஒன்று நேற்று காலை தோண்டப்பட்டது.
நேற்று காலை வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு உரு வந்ததையடுத்து, குறித்த பெண்மணி "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்கு யாரோ செய்வினை ஒன்றைச் செய்து, அதனை குறித்த மண்டபத்திற்கு முன்னால் உள்ள நிலத்தடியில் புதைத்து வைத்துள்ளார்கள்" என்று கூறியிருந்தார் .
இதனையடுத்து இப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், குறித்த பெண்மணி காட்டிய பகுதியில் - பருத்தித்துறை காங்கேசன்துறை வீதியையொட்டி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்கு முன்பாக - குழி ஒன்றை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். குழியைத் தோண்டும் போது குறித்த பெண்மணியும் அதே இடத்தில் இருந்தார்.
எதுவும் கிடைக்கவில்லை
குழி ஆழமாக சுமார் 8 அடி வரை சென்றும், பெண்மணியால் மேற்கொண்டு எதையும் காட்டமுடியவில்லை, மேலும் அவ்விடத்தை விட்டு அகன்றார்.
இதனையடுத்து தோண்டப்பட்ட குழி உடனடியாக நேற்று நண்பகலுக்கு முன்பாகவே மூடப்பட்டது. இச்சம்பவத்தில் எதுவுமே கிடைக்கப்பெறவில்லை. அனாலும் புதையல் கிடைத்ததாக வதந்தி ஒன்று பரவியிருந்தது. இதில் எவ்வித உண்மையுமில்லை.
தோண்டப்படும் குழியை ஆவலுடன் பார்வையிட்டவர்களுடன் , குழியைத் தோண்ட வைத்த பெண்மணி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S. Thamilvanan (malaysia)
Posted Date: July 26, 2015 at 14:36
ammavukku suniyama ammanuku oru kan alla aareram kan ammaven idathil suniyam irunthal amma kanavel vantu iyavukku solluva allatu ammave athai eduthiruva.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.