யாழ்ப்பாணம் பந்தயப் புறாக்கள் கழகம் & ஒன்றியம் இணைந்து நடாத்திய இளம் புறாக்கள் 2018 ற்கான பந்தயப் போட்டியில் வல்வெட்டித்துறை கம்பர்மலையைச் சேர்ந்த கந்தசாமி தாயாளன் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளார்.
புறா பந்தயப்போட்டி கடந்த மாதம் நடைபெற்றிருந்தது. முல்லைத்தீவிலிருந்து யாழப்பாணம் வரை பரந்த ஒருவரின் புறாக்கள் முதல் மூன்று இடங்களையும் பெற்றன.
இதே வேளை ஓமந்தையிலிருந்து யாழப்பாணம் வரை இன்னொரு போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மோ.கபிராஜ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
கந்தசாமி தாயாளன் மற்றும் மோ.கபிராஜ் ஆகியோர் தமது இடத்திற்கான பரிசில்களை பெற்றுக் கொள்வதனைப் படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.