இஸ்ரேல் கடந்த மூன்று வாரங்களாக பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது வான்வெளி மற்றும் தரை மார்க்கமாக மிகக் கொடூரமான தாக்குதலை நடாத்தி வருகின்றது. இதில் குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்ரேலின் இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனிய மக்கள் இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நேற்று நடாத்தியிருந்தார்கள்.
மேற்படி ஆர்ப்பாட்ட ஊர்வலம் காலை11.00 மணியளவில் Downing Street ல் இருந்து புறப்பட்டு Kensington ல் உள்ள இஸ்ரேல் தூதரகம் சென்று இறுதியில் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் முடிவடைந்தது. இதனால் லண்டனின் முக்கிய வீதிகளின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரும் அவஸ்தைப்பட்டனர்.
காசாவைக் கைப்பற்றியே தீருவேன் என இஸ்ரேலும், கடைசிப் பாலஸ்தீனியன் உயிரோடு உள்ள வரை எமது விடுதலைக்காக போராடிக் கொண்டிருப்பனே தவிர இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டான் என பாலஸ்தீனமும் விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றன.
பிரச்சினையைத் தீர்த்து வைக்க சர்வதேச நாடுகள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தாலும், இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய மக்களின் இந்த மோசமான இழப்புக்கள் மற்றும் அழிவுகள் உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
நேற்று லண்டனில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பெருமளவிலான வேற்று இன மக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை பாலஸ்தீன மக்களுக்கு வழங்கியிருந்தததைக் காணக் கூடியதாகவிருந்தது.
ஆர்ப்பாட்டங்கள் லண்டன் மட்டுமில்லாமல் தென் ஆபிரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,சிலி எனப் பல நாடுகளில் நடைபெற்றுள்ளன. பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலகம் அடக்கும் போலீசுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலீசாரால் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.