பலாலி விமான சேவை அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2019 (வெள்ளிக்கிழமை)
பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதி அளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் பூர்திசெய்யப்படும். விமான சேவை உத்தியோகபூர்வமாக 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.