செவ்வாய்க்கிரகம் தனது அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது. இவ்வாறான அதிசயம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை பார்வையிட கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3 விசேட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.00 மணி முதல் இரவு 10 மணி வரை விண்ணை பரிசோதிக்க முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதனை பல்கலைக்கழகத்தின் பாரிய அளவிலான தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி பார்வையிடமுடியும்.
பொலன்னறுவை விஜித மத்திய மகாவித்தியாலயத்தில் மற்றுமொரு விண்ணை பார்வையிடும் முகாம் நாளை மறுதினம் (1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி திருகோணமலை சிங்கள மத்திய மகாவித்தியாலயத்தில் இரவு 7.00 மணிமுதல் 9.00 மணிவரை இந்த முகாம் அமைக்கப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக நட்சத்திர விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 57.6 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் பூமியை கடக்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.