வல்வை சிதம்பரக் கல்லூரியில் கணித மூல வள நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி கல்லூரி அதிபர் திரு.சி.குருகுலசிங்கம் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.J.ரவீந்திரன் நாடா வெட்டித் திறந்து வைத்தார். நிகழ்வில் ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேதநாயகனும் கலந்து கொண்டார்.
கல்லூரியின் ஊட்டப் பாடசாலைகளான வல்வை மகளிர் மகா வித்தியாலயம், வல்வை சிவகுரு வித்தியாசாலை, அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை, கம்பர்மலை மகா வித்தியாலயம், கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை,
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் இந்த நிலையத்தில் மூலம் பயன் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கணித விளையாட்டு சம்பந்தமான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
குறித்த கணித மூல வள நிலையம் ஆரம்பிப்பதற்கு ஆரம்பத்தில் நிதியுதவி செய்திருந்தவர் முன்னாள் கணித ஆசிரியர் ஆவார்.
கல்விப் பணிப்பாளர் அனுமதியூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கணித மூல வள நிலையத்தில் தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் கற்றுப் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.