வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும் வேவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இலட்சுமிகாந்தன் (தங்கத்துரை) அவர்கள் இன்று 12.08.20 அன்று வல்வையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (மேஸ்திரியார்) சிவ ஈஸ்வரி அம்மா (கனடா) ஆகியோரின் அன்புப் புதல்வனும், சின்னத்தம்பி லட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும், இலட்சுமி தேவியின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னார் சுந்தர லட்சுமி (பேபி ரீச்சர்) சுவர்ணா (பவி), சுரேஷ், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஷ் குமார், மணிமாறன், உமா, ஜெசிந்தா ஆகியோரின் மாமனாரும்,
டிலானி, மலர் நிலா, சுரேந்தினி, கிருஷ்ணா, கஜேந்திரன், குமரன், பாலேந்திரன், அஸ்வினி, அர்ஜூன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
நவகோடி (கனடா) காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், காலஞ்சென்ற இந்திர வதனா, நந்தகோபால், சந்திரவதனா (கனடா), கணேசலிங்கம் (கனடா), திலகவதனா, கலாதேவி (கனடா) காலஞ்சென்ற திலகராசா ஆகியோரின் அன்பு சகோதரனும்)
இன்பன், றொசான் ஆகியோரின் சித்தப்பாவும், திமோ, வினோதா, வினோராஜ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சந்திரகுமார், சதீஷ்குமார், றஞ்சினி, மாலினி, செல்வவதி, தயாபரன், துஷ்யந்தன், தர்ஷன், சுஜிதா, சிவரூபன், ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
ஆன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் (வேவில் ஒழுங்கை), அதனைத் தொடர்ந்து தகனக் கிரியைகள் ஊரணி இந்து மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.