வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தெணியம்பை மற்றும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (ரஞ்சி) 2016.12.29 அன்று காலமானார்.
அன்னார் வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராஜா (வியாபாரியார்) அழகுரெத்தினம் தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகுபிள்ளை செல்வமாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,
முருகபிள்ளை சிவகுருநாதனின் அன்பு மனைவியும்,
சீவரெத்தினம், விஜியலக்சுமி, திலகவதி ஆகியோரின் சகோதரியும்,
சாமந்தி, சங்கீதா, கஜேந்திரன், விஜியந்தி, லதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணசீலன், ஜெயதாஸ், மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனா, கீர்த்திகன், கீர்த்துசா, சிந்துஜா, சகானா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை 2016.12.30 காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் காலை 10 மணியளவில் சுப்பர்மடம் இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீகள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.