மரண அறிவித்தல் - திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2017 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு நாவலவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம் அவர்கள் வியாழக்கிழமை 28.12.2017 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகசுந்தரம் சிவகாமிபிள்ளை அவர்களின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(ஒய்வு பெற்ற உப அதிபர் யாழ் St.John's College) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சாம்பசிவம் ஆத்தாட்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
சுகுமார், நந்தகுமார், சாந்தகுமார், காலஞ்சென்ற சாந்தினி, திருக்குமார் ஆகியோரின் அன்புத் தாயும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், காலஞ்சென்ற ராசகோபால், காலஞ்சென்ற சேவற்கோடியோன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் உடல் பார்வைக்காக 30.12.2017 சனிக்கிழமை அன்று Kalubowila Jayaratne மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் வைக்கப்பட்டு அன்னாரின் ஈமக் கிரியைகள் அன்று மாலை 5.00 மணியளவில் Kohuwala மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.