கொழும்பைப் பிறப்பிடமாகக்கொண்ட நடராஜசிவம் அவர்கள் இன்று (24-06-2020) மாலை காலமானார். (இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் ஒலிபரப்பாளராகவும், சூரியன் F.M வானொலி நிலையத்தின் முகாமையாளராகவும் பணியாற்றியவர்).
புவனலோஜினியின் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) அன்புக் கணவரும், திவாகரின் பாசமுள்ள அப்பாவும், தனுஷ்சியாவின் அன்பு மாமனுமாவார். .சி.மகேந்திரராஜா, .R.கஸ்தூரி ஆகியோரின் சகோதரரும்,
சி.பத்மலோஜினி, காலம்சென்ற வே.உருத்திரசிகாமணி. மற்றும் ப.கமலலோஜனி, வே.சங்கரசிகாமணி, வே.சுந்தரசிகாமணி, வே.பரமசிகாமணி, வே.இந்திரசிகாமணி, வே.ராஜசிகாமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இன்று வியாழன் 25-06-2020 பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, தகனக்கிரியைகள் கனத்தை இந்து மயானத்தில் 3.00மணிக்கு நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத் தருகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.