Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: October 25, 2016 at 19:57
மரணத்தை வென்ற வாழ்வும் இருக்கிறது..
சமுதாய வாழ்வில் பல்வேறு பிளவுகளும் பிரிவுகளும் வரும்.. இந்தப் பிளவுகளையும் பிரிவுகளையும் பொதுமைப்படுத்திவிடக் கூடாது.
பிளவுகள் பிரிவுகள் பக்கத்தில் ஓடும் நதிகள் போல ஓடினாலும் கூட அவை எல்லாம் கடந்து அனைவருடனும் பகையின்றி வாழ்வது எப்படி..
தங்கண்ணா வல்வை நகரசபையில் பணியாற்றிய காலத்தில் அவருடைய செயற்பாட்டை மதிப்பிட்டு, எனது வாழ்வில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொண்டேன்.
இன்று வல்வை பிளவுபட்டு நின்றாலும் வெப்பத்தால் மண் பல கோடியாக பிளந்தாலும் மண் ஒன்றுதான் என்ற தெளிவுடன் வாழ தங்கண்ணா போன்றோர் வாழ்வால் வழிகாட்டினார்கள்.
இவர்கள் வாய் மூலமோ, எழுத்து மூலமோ தகவல் தந்தவர்கள் அல்ல நம்மிடையே வாழ்ந்து காட்டிய முன்னோடிகள்..
மரணம் மனிதனை வென்றாலும் மரணத்தை வெல்லும் வாழ்வும் இவர்கள் வசம் இருந்துள்ளதற்கு இந்தத் தகவல் சான்றாக அமையட்டும்.
தங்கண்ணாவின் ஆத்ம சாந்திக்கு வணங்குகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.