வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா கொட்டிவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லநம்பி ரவீந்திரன் அவர்கள் 23-03-2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஊழியன் அச்சக உரிமையாளர் அமரர் செல்லையா நல்லதம்பி , அமரர் அல்லியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த அமரர் ஆறுமுகம், அமரர் காவேரிப்பிள்ளை தம்பதியனரின் மதிப்புமிகு மருமகனும்,
அதிர்ஷ்டரத்தினம் ( செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, முருகமூர்த்தி , அமரர் குமார ஶ்ரீதரன் , ரூபலக்ஷ்மி, அமரர் சந்திரகுமார் , செல்வச்சந்திரன் , பிருந்தாப ஈஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், பிரசன்னா, பிரசாந்த் , பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கரோலின் , அனுசியா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும், சாதனா , ஶ்ரீமதி ஆகியோரின் நேசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 24.03.2022 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து தகனக்கிரியைக்காக பெசன்ற் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.