Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: June 06, 2016 at 23:21
அன்பு நண்பா.. உனக்கு எமது உயர் மரியாதைகள்..
அன்று சிதம்பராவில் படித்த காலத்தில் சிரித்த முகத்துடன் வலம் வந்த உன்னை மறக்கத்தான் முடியுமா..?
எட்டாம் வகுப்புக்கு வந்தபோது இரும்புச்சிறையில் மாட்டியது போல மாட்டிக்கொண்டோம், எட்டுப்பாடங்களும் அடி வேண்டி அயர்ந்தபோது.. சிரித்த முகத்துடன் நிற்கும் உன்னைத்தான் பார்ப்போம்...
நண்பா எதையும் தாங்கும் உன் சிரித்த முகம் மறைந்துவிட்டதா..?
நண்பனே.. சென்றுவா..
உன் அன்பின் வாழ்க்கைத் துணை சகோதரி ஜெகதீஸ்வரி எனது வகுப்பில் படித்தவர்.. உன் பிரிவால் அவர் படும் துயரை எழுதத்தான் முடியுமா..
உன் மீது அவர் கொண்ட பாசம் சாதாரணமானதல்ல..
ஆண்டவனே அவருக்கு ஆறுதலை கொடுங்கள்..
நண்பனே..
உன்னோடு படித்த நண்பர்கள் அனைவரும் உன் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்..
அன்று சிரிக்க வைத்தாய் இன்று அழ வைத்துவிட்டாய்.. சென்று வா..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.