இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் - மாணிக்கரெத்தினம் யோகசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2022 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
மாணிக்கரெத்தினம் யோகசுந்தரம்
வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் தற்பொழுது இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வாசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கரெத்தினம் (ரெத்தினா) அவர்கள் இன்று (07.04.2022) காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற யோகசுந்தரத்தின் அன்பு மனைவியும்,
வடிவழகி வேலும்மயிலும் சிவமணியம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
செல்லச்சாமி (ஓவசியர்) நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகரெத்தினம்(பொன்னா), சரவணமுத்து(சித்திரம்) மற்றும் சௌந்தரராஜன் (சௌந்தம்) ஆகியோரின் தமக்கையாரும்,
செல்வேந்திரன், பாலேந்திரன், சசிகலா, சசிபானு, சசிரேகா, சசிரேணுகா, யோகேந்திரன் மற்றும் சசிவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இலக்குமணதாஸ்(சாமி), வடிவேலழகன், யோகராஜா(சேரன்), பாலகிருஷ்ணன்(துரை), கஜன்(லக்கி), சுஜாதா, கயல்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கருணன், செந்தூரன், பிரியா, ஜீகா, பிரியதர்ஷினி, ஆதித்தன், பிரியங்கா, கீர்த்தி, தினேஷ், ராகுல், ராகவி, த்ரிஷா, சாலினி, தருண். லக்சன், சாதனி, லக்ஸி, வருண் ஆகியோரின் அன்பு பேத்தியும், மிதுனா, ருதுசன், ஷேஸ்வின், துயானா, ஹேஸ்வினிகா, ஜிவிசனா, ரேஸ்வன், சாருஜா, டனுசன், கஜிஸ், டினுசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியம் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அன்னாரின் இல்லத்திலிருந்து 09-04-2022 சனிக்கிழமை மாலை 0400 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.