வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 16 பரப்புக்கள் கொண்டமைந்த இலங்கை சுங்கத்திற்குக் சொந்தமான காணி விரைவில் வல்வெட்டித்துறை நகரசபை வசப்படவுள்ளது. குறித்த காணியை வல்வெட்டித்துறை நகரசபைக்கு கையளிப்பதற்கும், இதற்கு பதிலாக வல்வெட்டித்துறை நகரசபை தமக்குச் சொந்தமான சுமார் 4 பரப்புக் காணியை சுங்க இலாகாவிற்கு வழங்குவதற்கான ஆவணத்தில் வட மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று கையொப்பம் இட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
இதனால் வல்வெட்டித்துறை நகரசபைக்கும் இலங்கை சுங்க இலாகாவிற்கும் இடையில் விரைவில் காணி மாற்றீடு இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.
மேலும் ரேவடியில் அமைந்துள்ள குறித்த பகுதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கின்னஸ் புகழ் பலதுறை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மிக விரைவில் இடம்பெறலாம் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
கீழே படங்களில் ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள சுங்க இலாகாவிற்குச் சொந்தமான பழைய மற்றும் தோற்றங்களைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.