உலகில் மிகவும் அரிதான வெள்ளை யானை ஒன்றை மியான்மார் காட்டு இலாகா அதிகாரிகள் மேற்கு அயேயர்வத்தி (Ayeyarwaddy) காட்டுப் பகுதி ஒன்றிலிருந்து கண்டுபிடித்துள்ளார்கள்.
1 ½ மாதத்திற்கு முன்னரே 7 வயது நிரம்பியுள்ள இந்த பெண் யானை முதன் முதலில் Pathein township என்னும் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் தென்பட்டபோதும், கடந்த வெள்ளிக்கிழமையே வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அரிய வகை அல்பினோ (Albino) வகை இந்த வெள்ளை யானைகள், மியான்மார், தாய்லாந்து, லாஒஸ் மாறும் சில ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாக வணக்கப்பட்டுவரும் ஒரு இனமாக இருந்துவருகின்றது.
வெள்ளை நிறத்தில் மிகவும் மெல்லிய சிவந்த நிறம் கொண்ட, வெள்ளை நிற கண் புருவத்தையும், நகங்களையும் இந்த வகையானைகள், பொதுவாக மாளிகைகளில் அரச வம்சங்களின் செல்லங்களாக இருந்துவருகின்றன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.