நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் கால்கோள் விழா இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று காலை 9.00 மணிக்கு கணபதி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதன்ன அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு கணபதி பாலர் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை திருமதி.சுகுணா உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விருந்தினர்களும், புதிய பாலர்களும் பாலர் பாடசாலை முகப்பு வாசலிலிருந்து பான்ட் வாத்திய சகிதம் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.
அத்துடன் கணபதி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது நிகழ்வு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.