மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உட்பட்ட மேலும் சில பகுதிகள் விடுவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2018 (வெள்ளிக்கிழமை)
வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் நேற்று 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஆனைக்கோட்டை கூலாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள 8 வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மயிலிட்டி கலைமகள் வித்தியாலய முன்றலில் நேற்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இவற்றுக்கான காணி பத்திரங்களை அரச அதிபர், சங்க தலைவர், மற்றும் கிராம சேவையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி, யாழ்.மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர், மற்றும் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலி, வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச தவிசாளர், அரச அதிகாரிகள், என பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.