காணொளியில் காணப்படுவது பின்னனியில் குருவிகளின் சத்தம், குறைந்தது 40 வருடங்களாகவேனும் அதே இடத்தில் அமைந்துள்ள அலரி மரம், பழைய கோபுரம், நெடியவீதி, இவற்றுடன் ஒன்றாகவுள்ளது சுமார் 115 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த வல்வை சிவன் கோவில் மடம். வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது இந்த புராதன கட்டடம்.
இந்த மடத்திலேயே வல்வையின் முதலாவது குறிப்பிடக்கூடிய அடையாளமான புலவர் சங்கரநாதர் வயித்தியலிங்கர் (வயித்தியலிங்கப்பிள்ளை) அவர்கள் ‘பாரதி நிலைய முத்திராட்சகசாலை’என்னும் பெயரில் அமைந்த அச்சகம் ஒன்றை நிறுவி அத்துடன் சைவசமயத்தைப் பரப்பும் நோக்கில் ‘’சைவ அபிமானி’’ என்னும் மாத இதழ் ஒன்றை வெளியிட்டும், தனித்துவமான தமிழை வளர்க்கும் நோக்குடன் தமிழ் பாடசாலையையும் நடாத்தியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.