இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் பொட்டம் ட்ரோலிங் (Bottom trawling) ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றம் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்திய அரச பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய கடற்றொழில் முறைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்த இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்காலத்தில் சமுத்திரவியல் ரோந்துச் சேவையை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் 6ம் திகதி இடம்பெறும்.
இன்றைய பேச்சுவார்த்தையில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம். எ. சுமந்திரன்இ வடமாகாண அமைச்சர் டெனிஷ்வரன்இ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் செந்தில் தொண்டமான்இ அமைச்சின் பிரதிநிதிகள்இ பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்திய அரச பிரதிநிதிகள் சார்பில் இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட 11 பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தை கலந்துகொண்டனர். (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.