Shipping Office உதவிக் காரியாலயம் யாழில் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)
கடலியல் சம்பந்தமான விடயங்களை மேற்கொண்டுவரும் Shipping Office இனுடைய உதவிக் காரியாலயம் (Merchant Shipping's sub secretariat office) ஒன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவதான இந்த அலுவலகத்தை துறைமுகம் மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் கடந்த வெள்ளிக் கிழமை ஊர்காவற்துறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாகதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு மற்றும் காரைதீவு ஆகிய யாழின் 5 தீவுகளுக்கும் யாழின் பிரதான நிலப்பரப்பிற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் படகுகளை தரத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்தக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தீவுகளுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் பயணிகள் படகுகள் பல தரம் குறைந்து காணப்படுவதுடன், உரிய பராமரிப்புக்கள், காப்புறுதிகள் இன்றிக் காணப்படுவதுடன் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கக் கூடிய வகையில் இல்லை எனக் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.