மஹோதய புண்ணிய கால சமுத்திர தீர்த்தம், ஊரணியில் சூரிய உதயத்திற்கு முன்னர் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2016 (சனிக்கிழமை)
144 வருடங்களிற்கு ஒரு முறை மட்டும் நிகழும் மிகவும் அரிய மஹோதய புண்ணிய கால சமுத்திர தீர்த்தம், நாளை மறுதினம் 8 ஆம் திகதி காலை வல்வையிலும் இடம்பெறவுள்ளது.
சூரிய உதயத்திற்கு முன்னர் நிகழவுள்ள இந்த தீர்த்த உற்சவம், வல்வை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
இந்த தீர்த்த உற்சவத்தையொட்டி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அம்பாள் , நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயில் விநாயகப் பெருமான் நாளை மறுதினம் காலை 5 மணிக்கு ஊரணி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளுவர் என கோயில் பரிபால சபையினர்கள் அறிவித்துள்ளனர்.
வல்வையில் நிகழும் மிகப் பிரமாண்டமான தீர்த்த உற்சவமாகக் கருதப்படும் இந்த உற்சவத்தில், வல்வை மற்றும் இதனை சுற்றியுள்ள 10 கோயில்களின் சுவாமிகள் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹோதய புண்ணிய கால சமுத்திர தீர்த்தம், ஊரணியில் சூரிய உதயத்திற்கு முன்னர் இடம்பெறவுள்ளதுhttp://www.valvettithurai.org/mahothaya-theerththa-ursavam-to-be-held-day-after-tomorrow-at-orani-valvettithurai-5756.html
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.