இன்றைய நாளில் வல்வையில் - 30 வருடங்களுக்கு முன்னர் புலேந்திரன், குமரப்பா மரணமும், ஞாபகார்த்த நிகழ்வுகளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் (தர்மராசா), குமரப்பா (இரட்ணாபாலன்) உட்பட நகுலகுமார், மனோகரன், யோகேந்திரராசா, குநேந்திரராசா, மோகனராசா, ரகுநாதன், உத்தமசிகாமணி, பாக்கியராசா, பிரான்சிஸ் அலோசியஸ், மரியநாயகம் ஆகிய பன்னிரு விடுதலைப் புலிகள் மரணமடைந்திருந்தனர்.
இவர்களில் குமரப்பா, மனோகரன் (கரன், வல்வெட்டி), யோகேந்திரராசா (பழனி), மோகனராசா (மிரேஸ்), ரகுநாதன் (ரகு, பொலிகண்டி), உத்தமசிகாமணி (அன்பழகன்) ஆகியோர் வல்வை மற்றும் வல்வையைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால், அன்றைய தினமும் அதனைத் தொடர்ந்து ஓரிரு தினங்கள் வல்வையில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இதனையடுத்து புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் நினைவாக, தமிழீழ விடுதலைப் புலிகளால் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள வெளியில், 1988 தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரை, இதே தினத்தில், ஒவ்வொரு வருடமும் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
வல்வையில் மிக அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இவையும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.
பொதுக் கூட்டம் நடைபெற்ற தீருவில் வெளியின் ஒரு பகுதி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.