இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சானது இலங்கை உயிர்காப்பு சங்கத்துடன் இணைந்து சர்வதேச ரீதியிலான உயிர்க்காப்புப் பயிற்சி பாடநெறி ஒன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கவனம் செலுத்தி நடாத்தவிருக்கின்றது.
இப் பயிற்சியானது வேலையற்ற 18 - 35 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும், நீச்சல் திறன் உடைய இளைஞர்களுக்கும் பொருத்தமானதாக அமையும்.
8 நாட்களைக் கொண்ட இப்பயிற்சியானது தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கடற்பிக்கபடும்.
இப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றிய அனைத்து பயிலுனர்களுக்கும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட International Life Saving (ILS) சான்றிதல், Pool Life Guard Licence, தேசிய இளைஞர் படையணியின் சான்றிதழ் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி அமைச்சின் பங்குபற்றல் சான்றிதழும் வழங்கப்படும்.
பயிற்சிக்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து விண்ணப்பங்களும் 2022 மார்ச் 02 ஆம் திகதிக்குள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரிடமோ அல்லது விளையாட்டு உத்தியோகத்தரிடமோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆரம்ப தேர்வு பரீட்சைக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆரம்ப தேர்வு 03,04,, .03. 2022, மற்றும் 05,06 .03.2022 நடைபெறும்
இடம் - : கிளிநொச்சி தேசிய விளையாட்டு மைதான நீச்சல்தடாகம்
தெரிவிற்காக ஒரு மாவட்டத்தில் இருந்து 30 வீரர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு :-
சிவா ஜிவிந்தன் - 0776534514
(விளையாட்டு உத்தியோகத்தர் மருதங்கேணி, தேசிய நீச்சல் பாதுகாப்பு வீரர்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.