வல்வை விளையாட்டுக் கழக முன்னாள் தலைவரும் வல்வை ரேவடி விளையாட்டுக் கழக முன்னணி விளையாட்டு வீரருமான அமரர் சிவநாதன் நிமலன் (குட்டி) ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தண்ட உதை ஒன்றில் கோல் ஒன்றை ரேவடி விளையாட்டுக் கழகம் தவற விட்ட நிலையில் நேதாஜி விளையாட்டுக் கழகம் 2:1 கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
குறித்த உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆட்ட நாயகனாக நேதாஜி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் கோபியும், தொடர் ஆட்ட நாயகனாக ரேவடி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் சீலனும், சிறந்த பின்புல வீரராக நேதாஜி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் ராஜ்யும், சிறந்த கோல் காப்பளராக நேதாஜி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் அஜித்தும் தெரிவு செய்யப்பட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.