வல்வெட்டிதுறையின் சிறந்த பஜனைப்பாடகரான திரு.இரத்தினவடிவேல் குகதாசன் (குகன்) நேற்று முன்தினம் வல்வையில் காலமானார். இவருக்கு வயது 69. வல்வையின் பஜனைக்குழுவின் பிரதம பஜனைப்பாடகரான இவர், சமயம் சார் பிரசாங்கத்திலும் சிறந்தவர் ஆவார்.
வல்வை முத்துமாரியம்மன் கோயில், வல்வை சிவன் கோயில், நெடியக்காட்டு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயில் உட்பட்ட பல கோயில்களின் பல்வேறு விழாக்களின் போதும் கடந்த பல ஆண்டுகளாக இவர் பஜனைகளில் ஈடுபட்டுவந்திருந்தார்.
பஜனைகள் தவிர, சைவப் பிரசங்கங்களிலும் ஈடுபட்டு வந்திருந்த இவர், கடந்த வருடம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவன்று, வல்வை ரேவடி கடற்கரை மைதானத்தில் இரவு இடம்பெற்ற கலை நிகழ்வின் போது, திரு.குகதாசன் தனது சகாக்களுடன் பிரசங்கம் ஒன்றை வழங்கியிருந்தார்.
திரு.குகதாசனுக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உண்டு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
மனோகரன் (United Kingdom)
Posted Date: March 25, 2015 at 02:19
எமது தமிழ் மூதாட்டி ஔவையார் அம்மைஂயாரை தனது புகளை பாடுவிற்பதற்காக சொர்க்க லோக அதிபதியாகிய வைத்தீஸ்வரன் தனது சொர்க்கலோகத்தில் தமது அருகாமையில் எப்போதும் நிரந்தரமாக வைத்திருப்பார். எமது வல்வை வைத்தீஸ்வரனின் சன்னிதானத்தில் எமது குகன் அண்ணா மிகவும் இனிமையாக பாடிய பஜனை பாடல்களை கேட்டு உள்ளம் உருகிய எம்பொருமான் சொர்க்கலலோக்தில் தனக்கு நிரந்தரமாக பஜனை பாடல்களை பாடுவிப்பதற்காகக எமது குகன் அண்ணவை தனது சொர்க்கலோகத்துக்கு அழைத்துச்சென்றுவிட்டான்.
Rajkumar periyathamby (canada)
Posted Date: March 23, 2015 at 14:05
ivarukku emathu ithaya ansalikal
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.