கெருடாவில் நற்பணிமன்ற புதிய கட்டடத்திறப்புவிழாவும் மாணவர் கெளரவிப்பு நிகழ்வும் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது.
நற்பணி மன்றத் தலைவர் திரு.கா.அரசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு.வே.சிவயோகன் (மாகாண சபை உறுப்பினர், வடமாகாணம்) அவர்களும், திரு.கி.சிவப்பிரகாசம் (ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், திரு.வ.கணேசமூர்த்தி (ஓய்வுநிலை அதிபர்) அவர்களும், திரு. ஜ.ஸ்ரீரங்கேஸ்வரன் (முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர், பருத்தித்துறை பிரதேச சபை) அவர்களும், திரு.இ.ஸ்ரீநடராசா (அதிபர் யா/தொண்டைமானாறு வீ.ம.வி) அவர்களும், திரு.க உதயரூபன் (அதிபர் யா/ கெருடாவில் இ.தக. பாடசாலை) அவர்களும், திரு.கு. ரவீந்திரன் (அதிபர் யா/இமையாணன் அ.த.க.வி) அவர்களும், திரு.ப சர்மிலன் (சமூக சேவை உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச செயலகம்) அவர்களும், திரு. வெ.சுப்பிரமணியம் (சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை பருத்தித்துறை) அவர்களும், திருமதி பி.கமலினி ௯பொருலாதர அபிவிருத்தி உத்தியோகத்தர் கெருடாவில் தெற்கு) அவர்களும், திரு.சி.சுதாகரன் (வாழ்வின் எழ்ச்சி அபிவிருத்தி உத்தொயோகத்தர் , கெருடாவில் தெற்கு) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
கெளரவ விருந்தினர்களாக திரு.பு.சாந்தரூபன் (கிராம சேவையாளர், வளவாய்) அவர்களும், திரு.வே.கஜேந்திரன் (தலைவர் வேலுப்பிள்ளை நினைவாலய நிதியம்) அவர்களும், திரு.சி.திருக்குமரன் (யாழ் பிராந்திய இணைப்பாளர், ஜக் அபிவிருத்தி நம்பிக்கை நிதியம்) அவர்களும், திரு. திருமதி கிசோக்காந் சிவாம்பிகை (ஆசிரியர் , A/L HUMAISARA, NATIONAL SCHOOL) அவர்களும், திரு. வே.பரமானந்தம் (முன்னாள் பொதுமுகாமையாளர், பரு.ப.நோ.கூ.சங்கம்) அவர்களும், திரு.மு.இரத்தினம் (சமூக ஆர்வலர்) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
நிகழ்வில் வரவேற்புரையை கெருடாவில் நற்பணி மன்றச் செயலாளர் அ.அஜந்தாவும் ஆசியுரையை திரு.பாலபத்நாபக் குருக்களும் வாழ்த்துரையை திரு.உலகநாதக் குருக்களும் வழங்கியிருந்தனர்.
விருந்தினர்கள் உரையைத் தொடர்ந்து மாணவர்கள் கெளரவிப்பு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.