காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பதற்கு முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது. இங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதற்கு தேவையான 50 ஏக்கர் காணியை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடமிருந்து இலங்கை துறைமுக அதிகார சபை பெற்றுக் கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல் துரை விவகார அமைச்சு மஷிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.