யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று (23) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் அலுவலகத்தி்ல், காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்திப் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் றோஹித அபேகுணவர்த்தன மற்றும் அதிகாரிகளுக்கு துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது
மேலும் இவ் விஜயத்தின் போது தமிழகம் காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அண்மையில் கோரிக்கை முன்வைத்திருந்தார். அதனையடுத்தே காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அரசு கவனம் எடுத்துள்ளது.
இந்திய எக்ஸிம் வங்கியின் (Exim Bank) நிதி உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அபிவிருத்தி திட்டமானது ரூபாய் 45.27 மில்லியன் (அமெரிக்க டொலர்) செலவில் நடைபெறவுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த கப்பற்துறை அமைச்சர் – துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் இந்திய நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறதாகவும் தெரிவித்த கப்பற்துறை அமைச்சர் இதனூடாகயாழ்ப்பாணத்தில் பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Fb நிரோஜன்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.