கா.பொ.த (உ/த) முடிவு - யாழ் மாணவர் தேசிய சாதனை, ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவர் தேசிய ரீதியில் முதல் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2017 (சனிக்கிழமை)
வெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி யாழ் மாவட்டத்திலும் தேசிய சாதனைகளை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
தமிழ் மொழிமூல பொறியியல் தொழில்நுட்பத் துறையில் யாழ் ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவர் தேசிய ரீதியில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவன், கனகசுந்தரம் சதுர்ஸஜான் அனைத்து பாடங்களிலும் திறமைச்சித்திகளை பெற்று தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் - மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். (tamil.news.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.