வல்வை நகரசபையில் கடந்த வருட இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்படிருந்த இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக 5 நகரசபை உறுப்பினர்களான க.சதீஸ், சே.குலநாயகம், ம.மயூரன், ச.பிரதீபன், கோ.கருணானந்தராசா ஆகியோரினால் இந்த வருட ஆரம்பத்தில் தொடரப்படிருந்த வழக்கு, இன்று யாழ் மேல் நீதிமன்ற (JaffnaHigh Court) நீதிபதி கனகா சிவபாதம் அவர்களால் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் சார்பில் சட்டத்தரணி கனகசிங்கமும், எதிர்மனுதாரர்களின் சார்பில் அரச சட்டத்தரணி மோனராஜா மற்றும் சட்டத்தரணிகளான தேவராஜா ரெங்கன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர்.
இருதரப்பு சட்டத்தரணிகளினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிமன்றம், குறித்த வரவு செலவு திட்டம் முடிய சொற்ப நாட்களே உள்ளதைக் கருத்திற்கொண்டு வழக்கை தள்ளுபடிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.