யாழ்ப்பாணம் – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக வைத்து பராமரிக்கப்பட்ட வெளிநாட்டு இனத்தை சேர்ந்த மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக நேற்று (29) மாலை இறந்தது.
இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதனை இறைச்சியாக்குவதற்கு பெரியளவில் விளம்பரமும் செய்யப்பட்டது. அதற்கு யாழில் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பி, இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மாடு மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இதனை அங்கு வரும் ஏராளமான அடியவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும்.
இந்நிலையில் முதுமை காரணமாக இறந்த குறித்த மாடு, சமய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.