அவர் வெளிநாட்டுக்குப்போகத் தேவையான பல மில்லியன்களையும் அவர்களே கொடுக்க இருக்கிறார்களாம் என்றும் சொன்னார்.
கிட்டத்தட்ட இதை ஒத்த பல சம்பவங்களைக் அடிக்கடி காணக்கிடைக்கிறது.
ஒரு இருபது வயது ஆண் வாழ்க்கை பற்றி எந்தக் கவலையுமில்லாமல், ஒரு 17 வயதுப்பெண்ணைக் கர்ப்பமாக்கிவிட்டு, வீட்டிலே சும்மா இருந்துகொண்டு வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் குடும்பம் நடத்துமளவுக்கு நம் இளைஞர் சமூகம் வந்துள்ளது.
இதற்கான மிகமுக்கிய காரணம் நம் புலம்பெயர் சொந்தங்கள் விடுகின்ற தவறுதான்.
நீங்கள் விடுகின்ற முதல் தவறு, வெளிநாட்டிலே நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு அந்தப் பணத்தை உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாமல் விடுவதுதான்.
வெளிநாட்டுக்குப்போனா ஈசியா உழைக்கலாம் அல்லது அகதிக் காசே சும்மா இருக்க பல லட்சம் வரும் என்ற மாயையிலே நம்முடைய இளம் சமூதாயம் உழைப்பின் வலிமை தெரியாமல் உருவாகிவிட்டது.
நீங்களும் சொந்தங்கள் பாவம் என்று கேட்டதும் அனுப்புகின்ற பணம் அவர்களின் சோம்பேறித்தனத்தை இன்னும் அதிகரித்து விடுகின்றது.
இங்கே உழைப்பதற்கு வழிகளில்லாமல் இல்லை.
நான் அடிக்கடி செல்லும் ஒரு ஆட்டோக்கார ஐயா இருக்கிறார். 60 வயதுக்கும்மேல் இருக்கும்.அவரிடம் ஒருநாள் உங்கள் வருமானம் எவ்வளவு என்றேன்.
மாதம் 60 ஆயிரம் வரும் பெற்றோல் செலவு போக 45 ஆயிரம் மிஞ்சும் என்றார். 45 ஆயிரம் குடும்பம் நடத்தப்போதுமா ஐயா என்றேன். இது சும்மா பார்ட் டைம் (part-time) வேலைதான் ஐயா, மெயினா நான் விவசாயம்தான் செய்கிறனான் என்றார்.
ஒரு 60 வயது தாண்டியவர் பார்ட் டைம் ஆட்டோ ஓட்டியே மாதம் 45 ஆயிரம் ( ஒரு பட்டதாரி ஆசிரியரைவிட அதிகமான சம்பளம்) உழைக்கும்போது, ஒரு 20 வயது அப்பாவாகப்போகும் இளைஞன் முழுநேரமாக ஆட்டோ ஓட்டினால் எவ்வளவு உழைக்கலாம்?
பருத்தித்துறையிலே ஒரு கடலை , வடை செய்து விற்கும் தள்ளுவண்டியை பருத்திதுறை பஸ் நிறுத்தத்திற்கு அண்மையில் காணலாம். புத்தளத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவும் மகனும் இங்கே தங்கியிருந்து இந்தத்தொழிலைச் செய்கிறார்கள். பின்னேரத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதும். மாதம் எப்படியும் லட்சமாவது உழைப்பார்கள். புத்தளத்தில் இருந்து ஒரு அப்பாவும் மகனும் தங்கியிருந்து இங்கேயே இவ்வளவு உழைக்கும்போது, இங்கே இருக்கும் ஒரு 20 வயது இளைஞனை ஓசிச்சோறு சாப்பிட வைத்தது எது?
எங்கட குடும்பம் ஆட்டோ ஓடுறதா? சுண்டல் விற்கிறதா என்ற வெத்துக் கெளரவம்தான் இதற்குக் காரணமாகிறது.
20 வயதில வேலை வெட்டி இல்லாமல் ஓசிசோறு சாப்பிட்டுக்கொண்டு கல்யாணம் முடிக்கும் ஒருவன், லண்டன் வந்து எக்கவுன்டன் வேலை பார்க்கப்போறதில்லை. மேலே சொன்ன வேலைகள் போல ஒன்றைத்தான் செய்யப்போகிறான்.
அவன் லண்டன் வரும்வரையாவது (இப்போது திருட்டுத்தனமாக லண்டன் போவது அவ்வளவு ஈசியா என்று தெரியவில்லை) அவனுக்கு சும்மா காசு அனுப்பாமல், ஒரு 3 லட்சம் அனுப்பி, ஆட்டோ ஓடிக் குடும்பம் நடத்து, இனிக்காசு அனுப்பமாட்டோம் என்றால், அவனும் உழைக்கக்கற்றுக்கொள்வான். அவன் லண்டன் வந்தும் உழைத்து நல்ல நிலைக்கு வர உதவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: October 27, 2021 at 19:57
நிதர்சனமான பதிவு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.