வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவாகக் கருதப்படும் தேர்த் திருவிழாவில் நீண்ட இடைவெளியின் பின்னர் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 5 மணியளவில் மூலஸ்தான அபிசேகத்தைத் தொடர்ந்து, தேர் விசேட வசந்த மண்டப பூசை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து சுமார் 9 மணிக்கு தேர்கள் வீதியுலா இடம்பெற்றது. வீதியுலாவின் போது ஏராளமான அடியார்கள் அங்கப்பிரதட்சணை மற்றும் அடிக்கழித்தலில் ஈடுபட்டனர்.
தேர்கள் வீதியுலாவின் பின்னர், தேரில் அம்பாளுக்கு பச்சை சாத்தி அவரோகணித்தல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றது.
கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நாளை வரை விடுமுறை தினங்கள் ஆகையால், நாட்டின் பிற இடங்களில் வசிக்கும் வல்வையர்கள் மற்றும் புலம் பெயர் வல்வையர்கள் என மக்கள் வெள்ளம் இன்று வீதிகளை நிறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.