உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின் (Foreign and Commonwealth Office, UK), 2017ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஆண்டு அறிக்கை (Human rights and democracy report 2017) லண்டனில் வெளியிடப்பட்டது.
உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், 2017ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஆண்டு அறிக்கை லண்டனில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில், ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள்” ((Human Rights Priority Countries) என்று 30 நாடுகளின் பட்டியல் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைகள் நிலைமைகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றங்களையே அடைந்துள்ளது என்று கூறியே, முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் இலங்கையை உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.
முன்னுரிமை நாடுகளின் மனித உரிமைகள் விடயங்கள் குறித்து தீவிரமான கரிசனை கொண்டுள்ளதாகவும், இந்த நாடுகள், மனித உரிமைகள் சூழலை முன்னேற்றுவதற்கு சாதகமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று நம்புவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா மிக மெதுவாகவே செயற்படுவது குறித்தும் பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.