தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய மிக நவீன வசதிகள் தற்பொழுது உள்ள பொழுதிலும், இன்னும் சிலர் இவை பற்றி அறியாமல் உள்ளனர். இதனைக் கருதத்தில் கொண்டும், எமது சில போசகர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், தமிழில் தட்டச்சு (Type) செய்வது எப்படி என்பதை மிக இலகுவான வழிமுறைகளில், தேவையான படங்களுடன் (Screen shots) தெரிவித்துள்ளோம். வாசகர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று பெரிதும் நம்புகின்றோம்.
1. எங்கள் இணையதளத்தின் இடது பக்க Contents பகுதியில் உள்ள Useful links ற்குச் செல்லவும். (அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ளது)
2. அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ள http://www.goggle.co.in/transliterate என்னும் தொடுப்பை (link) அழுத்தவும்
3. அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ள பகுதியில் ஆங்கிலத்துக்குப் பதில் தமிழைத் தெரிவு செய்யவும்
4. இப்பொழுது விரும்பிய தமிழ் சொற்களை கீழே காட்டியவாறு ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யவும்
6. தற்பொழுது தேவையான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
7. தேவையான வசனங்கள் தட்டச்சு செய்யப்பட்டவுடன், அவற்றை Copy செய்யவும்
8. Copy செய்த தேவையான வசனங்களை, தற்பொழுது வேண்டிய பகுதிகளில் (MS word, email, Face book etc)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
மனோகரன் (United Kingdom)
Posted Date: March 28, 2015 at 05:48
கடந்த பல ஆண்டுகளாக தமிழில் தட்டச்சு செய்யும் கலையை கற்று கணணியில் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடன் பலரிடமும் இதைப்பற்றி விசாரித்து அலைந்து கொண்டிருந்தேன். அலைச்சல் என்றல் சாதாரனமான ஒரு அலைச்சல் அல்ல. நாயாய் பேயாய் அலைவது என்று சொல்வார்களே அந்த மாதிரியான ஒரு அலைச்சல். நான் விசாரித்து பார்த்த யாருக்கும் இந்த தமிழ் தட்டச்சு கலையை பற்றி தெரியவில்லை. நான் இப்படி அலைந்து திரிவதை கேள்வியுற்ற எனது நன்பன் ஒருவன் ஒரு இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த தமிழ் தட்டச்சு கலையை உங்களது valvettiturai.org என்ற இணையத்தளம் மிகவும் இலகுவாக கற்றுத்தருகிறது எனக்கூறி உங்களது இணையத்தளத்தினுள் பிரவேசித்து எப்படி கற்றுக்கொள்ளலாம் என விபரித்தான். உங்களது இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் காட்டிய படிமுறைகளின்படி சென்று இந்த கலையை கற்றுக்கொண்டேன். நான் ஒருக்காலும் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு இலகுவாக கற்றுக்கொள்வேன் என்று. நான் நிணைத்துக்கொண்டிருந்தேன் என் வாழ்நாளில் இந்த கலையை கற்க முடியாமல் போய்விடுமோ என்று. ஆணால் இண்று உங்கள் புண்ணியத்தால் இந்த நன்றி மடலை உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கிறேன் .சிவபுராணத்திலே மாணிக்கவாசக சுவாமிகள் பாடுவார்கள் அவன் அருளாள் அவன் தாள் வணங்கி என்று அதே போன்று நானும் இன்று உங்கள் அருளால் உங்கள் தாள்களை நன்றியுடன் வணங்துகிறேன்.
valvettiturai.org இணையத்தளமே எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து கோடான கோடி நன்றிகள் உனக்கு.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.