கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதில் எம்பிலிபிட்டிய ஆரம்ப பாடசாலையை சேர்ந்த W.A. வேணுஜா ரிம்ஸாத் 199 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வருடம் அக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தன்று தரம் 5 புலமைப்பரீட்சை முடிவுகள் வெளியானதால் ஏற்றபட்ட அசகௌரியங்களினால் அதற்கு முன்னதாகவே இன்று வெளியிடப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தமது செய்தி குறிப்பில்தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியான தரம் 5 புலமைப்பரீட்சை முடிவுகளை மேற்படி இணைப்பில் http://www.doenets.lk/exam/index.html இணையத்தில் பார்வையிடலாம் என்றும் கொழும்பு, ஜயவர்த்தனபுர பாடசாலை அதிபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் முடிவுகளை பரீட்சை திணைக்களத்தில் பெற்று கொள்ளலாம் என அச்செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை நாடாளவிய ரீதியில் வேணுஜாவுக்கு அடுத்ததாக 197 புள்ளிகளை பெற்று பெம்முல்ல பிரதேசத்தை சேர்ந்த பிட்டியேகெதர ஆரம்ப பாடசாலையை சேர்ந்த சஹானி யசோதரவும், மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த சாகிரா கல்லூரியை சேர்ந்த பாத்திமா சமாவும் தமக்கிடையே மூன்றாமிடத்தை பகிர்ந்துள்ளனர்.
இதேவேளை ஒவ்வொரு மாவட்டத்துக்குமான வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியுள்ளன. கீழே தமிழ் மொழிமூலத்துக்கான வெட்டுப்புள்ளிகளை தருகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.