கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த செயன்முறை பரீட்சை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் ஏனைய விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டுள்ளனதாகவும் அவர் கூறினார்.
நடனம், சங்கீதம், நாட்டியம், அரங்ககேற்றம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தோற்றவிருக்கிறார்கள். இதற்கென நான்காயிரத்து 500 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கான பயிற்சிகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.