தவத்திரு வே. முருகேசு சுவாமிகளின் 20 ஆவது குருபூசை நிகழ்வு நேற்றையதினம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரு க. ஆனந்தராசா அவர்கள் குருவின் வார்த்தை நிதர்சனம் என்னும் பொருளில் பக்கவாத்திய சகிதம் இசை சொற்பொழிவை ஆற்றினார்.
முருகேசு சுவாமிகள் என அழைக்கப்பட்ட சுவாமி ஆர். கே. முருகேசு (ராமன் காளிமுத்து முருகேசு) இலங்கையின் இந்து ஆன்மீகவாதிகளில் ஒருவர் ஆவார். காயத்திரிச் சித்தர் (Gayathri Siddhar) என அனைவராலும் போற்றப்பட்ட இவர் இலங்கையின் நுவரெலியா நகரில் வாழ்ந்தவர். நுவரெலியா நகரில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் ஆலயம் (Sri Lankatheeswara temple) மற்றும் காயத்திரி பீடம் என்பன இவரால் நிறுவப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.