தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) கொள்கை பரப்புச் செயலாராக பதவி வகித்திருந்த சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு.கணேஸ் வேலாயுதம் ரெலோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உத்தியோகபூர்வமாக கணேஷ் வேலாயுதம் அறிவித்துள்ளார்.
மக்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் கட்சியிலிருந்தவாறு என்னால் முழுமையாக பூர்த்தி செய்யமுடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களின் தொழில் முயற்சிகள் கல்வி விளையாட்டுதுறை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு சமூகசேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
அத்துடன் இலாபநோக்கமற்ற சமூகசிந்தனை சார்ந்த ஆர்வலங்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தால் நாம் புதியதோர் கட்சியினை ஆரம்பித்து மகாணசபையின் ஊடாக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். எனவே சமூகசிந்தனையாளர்களும் ஆர்வலர்களும் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன் என திரு கணேஷ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.