வல்வை கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெற்றது.
கணபதி பாலர் பாடசாலை தலைவர் திரு.பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.திருநாவுக்கரசு அரவிந்தன் (அதிபர்/ யா.துன்னாலை தெற்கு அ.த.க பாடசாலை) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறார்களின் பாண்ட் வாத்தியத்தியம், இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றலுடன் விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. விளையாட்டுப் போட்டியில் சிறார்களின் உடற்பயிற்சி தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கான தடை ஓட்டம், ஓட்டம், சிறுவர், சிறுமிகளின் இசையும் அசைவும் நிகழ்வும் மற்றும் வினோதஉடை போட்டியும் இடம்பெற்றிருந்தது.
சிறார்களின் விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து பழைய மாணவ, மாணவிகளின் ஓட்டம், பெற்றோர், மத்தியதர்களுக்குகான பந்து பரிமாற்றம் என்பன நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.