தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதி புனரமைப்புக்கு 4.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2020 (வியாழக்கிழமை)
பழுதடைந்துள்ள தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த நீர் வெளியேறு பகுதியை புனரமைப்பு செய்வதற்காக 4,22 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ள நிலையில் புனரமைப்பதற்கான கேள்விகள் தற்போது கோரப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தினால் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழினுட்ப மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த நீர் வெளியேறு பகுதியின் வேலைத்திட்டத்துக்குரிய மதிப்பீடானது மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு யாழ் மாவட்ட பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது..
இதனிடையே தற்போது உள்ள பாலத்தின் கீழ் போரின் போது தகர்க்கப்பட்ட பழைய பாலத்தின் இடிபாடுகள் இருப்பதால் தொடர்மழையின் போது நீரோட்டத்தை அது தடைசெய்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.