கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து வல்வையர் ஒருவர் உட்பட நால்வர் விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2017 (வெள்ளிக்கிழமை)
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு இலங்கைத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.வி.ஓசியன்லேடி (m.v.Ocean Lady) என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
ஃப்ரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பா, ஹமல்ராஜ் ஹந்தசாமி, ஜயசந்திரன் கனகராஜ் மற்றும் விக்னராஜா தேவராஜா ஆகிய நான்கு பேருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கனடாவின் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசத் தரப்பு சட்டத்தரணி தவறி இருப்பதாக உயர் நீதிமன்ற நீதியரசர் தெரிவித்துள்ளார்.
குறித்த நான்கு பேரும் ஆட்கடத்தல் காரர்கள் அன்றி அகதிகளே என்றும், ஏனையவர்களுக்கு உதவியளித்துள்ளமையை ஆட்கடத்தல் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து குறித்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.