பிரித்தானியாவில் இந்துக்களிற்கான முதலாவது சுடுகாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2021 (புதன்கிழமை)
ஜரோப்பாவில் மிக அதிகமாக இந்துக்கள் வாழும் நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இந்துக்களுக்கான மூதாலாவது சுடுகாடு தென்கிழக்கு இங்கிலாந்திலுள்ள பாக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவில் பிற மதத்தினருக்கு இருப்பது போல, இந்துக்களுக்கான தனியான சுடுகாடு வேண்டுமென, பிரித்தானியாவில் வாழும் இந்துக்களினால், அனுபம் மிஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம், பிரித்தானிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கை நீண்ட நாட்களாக ஏற்றுக்கொள்ளபடாமல் இருந்த நிலையில், தற்போது பிரித்தானியாவின் திட்ட ஆய்வாளர் அலுவலம், சுடுகாட்டினை நிர்மாணிப்பதற்கு, அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து பாக்கிங்ஹாம்ஷயரில் உள்ள சுவாமி நாராயணன் ஆலயத்திற்கு அருகில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சுடுகாடு நிர்மாணிக்கப்படவுள்ளது.
தகனம் , ஈமச்சடங்கு என ஒவ்வொரு சடங்கிற்கும் ஏற்றவகையில், தனித்தனிப் பகுதிகளாக கொண்டு, இந்த சுடுகாடு அமைக்கப்படவுள்ளது. குறித்த சுடுகாட்டில், இறுதிச்சடங்கில் சுமார் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கபப்டுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.