நேற்று முன்தினம் இலங்கைக்கு அப்பால் M T New Diamond என்னும் பாரிய எண்ணை தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட பாரிய தீ தற்பொழுது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கரையோர பாதுகாப்பு படைக்கு (Indian Coast Guard) சொந்தமான ALP Winger என்னும் இழுவைப் படகினால், கப்பல் தற்பொழுது ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றது.
Sri Lanka Navy, Sri Lanka Air Force, Sri Lanka Ports Authority, Indian Navy மற்றும் Indian Coast Guard ஆகியவை கூட்டாக தீயைக் கட்டுப்படுத்துவதில் பங்கு கொண்டிருந்தன என அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் இயந்திர அறையின் பொய்லர் (Boiler) என்னும் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு (Explosion) சம்பவமே குறித்த தீ சம்பவத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.